தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் என்பவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் குருவலட்சுமிக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குருவலட்சுமியின் கணவருக்குத் தெரிய வர இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக குருவலட்சுமி கணவரைப் பிரிந்த வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தைகள் வளர்ந்த நிலையில், அவர் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சின்ன கெங்குராஜ், தொடர்ந்து குருவலட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.