தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ‘போக்கிரி’, கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து ‘அப்பு’ எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.
அவர் இயக்குநராக அறிமுகமான ‘பத்ரி’ திரைப்படம் வெளியாகி, இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கி வரும், ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார்.
சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பூரி ஜெகன்நாத்திற்கு, விஜய் சேதுபதி வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, “இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது! சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல.
அது உங்களின் தைரியம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அச்சமற்ற குரலால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்.
அன்புள்ள பூரி சார், ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.
What a journey it has been for this Man
26 years in cinema is not just a milestone, it’s a legacy built with courage, conviction, and a fearless voice.
Dear Puri sir, it was an absolute pleasure working with you on #SLUMDOG – 33 Temple Road. As actors, we always look… pic.twitter.com/XJ9NM1fWv2
— VijaySethupathi (@VijaySethuOffl) April 20, 2026
நடிகர்களாகிய நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களின் எல்லைகளைத் தாண்டி எங்களை உந்தித்தள்ளும் இயக்குநர்களையே தேடுகிறோம். நீங்கள் அதை மிக எளிதாகச் செய்கிறீர்கள்.
இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களின் இந்த வெற்றிகரமான கதை சொல்லும் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். என்றும் உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு” எனப் பதிவிட்டிருக்கிறார்.