தொழிலதிபர் கெளதம் அதானி மீதான அனைத்து வழக்குகளையும் கைவிட்ட அமெரிக்கா | US drops all cases against businessman Gautam Adani

Spread the love

தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அதானி மீதும், அவரது உறவினர் சாகர் அதானி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான வழக்கு நியூயார்க் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அதானி மற்றும் அவரது உறவினர் மீதான வழக்குகளை அமெரிக்கா கைவிட இருப்பதாக செய்தி வெளியானது.

இவ்வழக்கு விசாரணையின்போது தன் மீதான வழக்குகளைக் கைவிட அதானி 6 மில்லியன் டாலரும், அவரது உறவினர் சாகர் அதானி 12 மில்லியன் டாலரும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

அதனை கோர்ட் ஏற்றுக்கொண்டது. அவர்கள் தங்கள் மீதான புகாரை மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை. அவர்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் இரண்டு பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இது தவிர ஈரானில் இருந்து தடையை மீறி எல்.பி.ஜி வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க கருவூலத்துறை கைவிட்டுள்ளது. இதற்காக 275 மில்லியன் டாலர் கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க நீதித்துறை இது தொடர்பாக கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதில் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்ததாகவும், இனிமேல் இதற்காக மேற்கொண்டு செலவிடப்போவதில்லை என்றும் நீதித்துறை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *