‘நள்ளிரவில் காணாமல் போன எம்.எல்.ஏவுடன் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி!’ – விஜய் மீது சரமாரி புகார்! ||“Midnight Political Drama: TTV Meets Governor With ‘Missing’ MLA, Targets Vijay With Fresh Complaints”

Spread the love

இந்த சமயத்தில்தான் காமராஜின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த செய்த தெரிய வந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். யாரோ திருட்டுத்தனமாக ஒரு கடிதத்தை தயார் செய்து வாட்ஸ் அப் வழியாக அனுப்பியிருக்கிறார்கள். தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அதனால் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்கள். அமமுகவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார், எனவே கட்சித்தாவல் தடை சட்டம் வராது என குயுக்தியாக யோசித்து தவெகவினர் போலிக் கடிதத்தை தயார் செய்திருக்கின்றனர்.

ஆளுநர் மாளிகையில் காமராஜ் எம்.எல்.ஏவுடன் டிடிவி

ஆளுநர் மாளிகையில் காமராஜ் எம்.எல்.ஏவுடன் டிடிவி

ஆளுநர் அலுவலகத்திலிருந்து கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அழைத்ததால் எங்களுக்கு நடந்ததெல்லாம் தெரியவந்தது.

தூயசக்தி செய்கிற வேலையா இது? ஆட்சி அமைப்பதற்குள்ளேயே இவ்வளவு மோசடிகளை செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு டுபாக்கூர் பார்ட்டி. சிபிஐ, சிபிஎம் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து விட்டு, இப்போது தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிறீர்களே, உங்களுக்கு நியாய தர்மம் இல்லையா?

தவெகவுக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரின் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்றார்.

விஜய் மீதான டிடிவி தினகரனின் புகாரால் தவெக ஆட்சியமைப்பதில் தொடர் சிக்கல் நிலவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *