அதே போல், 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்தின் விலை, தற்போது ரூ.2,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காயின் விலையும் ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்டாய் தயாரிப்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளிப்பது தொடர்பாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தினோம்.

இதில், கடலை மிட்டாயின் தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளோம். ஒரு கிலோ கடலைமிட்டாயின் விலை 220 ரூபாய் என்பதை 275 ஆக உயர்த்தியுள்ளோம். நிலக்கடலையின் விலை குறைந்தால் கடலைமிட்டாயின் விலை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த விலை ஏற்றம் தடுக்க முடியாத ஒன்று. இதனை பொதுமக்களும் வியாபாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.