இந்த நிலையில் நீட் மறுதேர்வு எழுதத் தயாராகி வந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஷ்னியின் பெற்றோரும், உறவினர்களும் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து ரோஷ்னியின் உடல், உடற்கூறாய்வாக்காக தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீட் தேர்வு குறித்த அச்சத்தினால்தான் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலகோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.