நெரிசலில் தவித்த உயிர்… ஓடும் பேருந்திலிருந்து குதித்து காப்பாற்றிய தேவதைகள்!- நெகிழ்ச்சி சம்பவம்! | two nurses saved a person who suffered a heart attack amidst a traffic jam

Spread the love

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது நமக்கு எரிச்சலையும் தாமதத்தையுமே தந்து பழகியிருக்கிறது. ஆனால், அதே நெரிசலில் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு செவிலியர்கள் காட்டிய அசாத்திய துணிச்சலும் மனிதாபிமானமும், இன்று ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை மீட்டுக்கொடுத்திருக்கிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.

ஒக்கல் அடுத்த தன்னிப்புழா பகுதியில் லாட்டரி கடை நடத்தி வரும் 43 வயதான சினோஜ் என்பவருக்குத் திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், தனியாகவே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

ஆனால் விதி, காலடி பாலம் அருகே எம்.சி சாலையில் போக்குவரத்து நெரிசல் என்ற ரூபத்தில் அவரைச் சூழ்ந்தது. வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்த நிலையில், வலியின் வேதனை தாங்க முடியாமல் சினோஜ் காரினுள்ளேயே சுருண்டு விழுந்தார்.

மரணத்தின் பிடியில் ஒரு மனிதன் தவித்துக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்தவர்கள் கவனித்து சத்தமிட, அங்கே ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், அந்தப் பாதையில் வந்த கேரள அரசுப் பேருந்தில் அங்கமாலி எல்.எஃப் மருத்துவமனையின் பணியாளர் அஞ்சலி பைஜூ மற்றும் பெங்களூருவில் செவிலியர் பயிலும் மாணவி ஆர்த்ரா ராஜ் ஆகிய இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *