நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதிப்புகளைக் கூறினர். அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அறிமுகமான நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைக் கூறினார்.

இதுகுறித்து ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல 16 வயது மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், பின்னர் பல்வேறு எண்களில் இருந்து தொந்தரவு செய்து வந்தாகக் கூறினார். இதுகுறித்து குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு தகவல் கூறப்பட்டதுடன், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.