நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகியிருக்கின்றனர்.
மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
பல முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. ஏராளாமான மக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
இந்த வெள்ள பாதிப்பில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 20 பேர் மட்டுமே தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தெரிவித்துள்ளார்.