நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வருகின்றனர்.
இந்த வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதைத் தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் தமிழ்நாடு சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
அவரது பதிவு …
“திடீர் வெள்ளப் பெருக்கிற்குப் பனிப்பாறை சரிவே முதன்மைக் காரணம் எனத் தகவல்.
நிலநடுக்கத்தை விட, பனிப்பாறை சரிந்ததே இந்தப் பேரழிவு வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 26 அன்று காலையில், திபெத்தில் சுமார் 17,000 அடி (5,200 மீட்டர்) உயரத்தில் அமைந்திருந்த ஒரு பனிப்பாறை திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது.
அந்தப் பனிப்பாறைப் பாளம் கிட்டத்தட்ட 4,000 அடி (1,200 மீட்டர்) ஆழத்திற்குக் கீழே விழுந்துள்ளது. சரிந்து விழுந்த பனிப்பாறையின் பகுதி சுமார் 2,000 அடி (610 மீட்டர்) அகலம் கொண்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்கு சமமாக…
அவ்வளவு பெரிய பனிப்பாறைக அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததால், நிலத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.