அவர், “ஹைதராபாத்தில் வெங்கட் பிரபு சாரின் ‘GOAT’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போதொரு நாள் திடீரென ஜெகதீஷ் சாரின் குழுவிலிருந்து என்னை அழைத்தார்கள்.
‘நீங்கள் ஒருமுறை விஜய் சாரைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம்! ‘திடீரென என்ன விஷயம்?’ என்று யோசித்தபடியே, கையில் இருந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக அவரைப் பார்க்க ஓடினேன்.

அவரது வேனிட்டி வேனுக்குள் சென்று சுமார் 15 நிமிடங்கள் அவருடன் அமர்ந்து பேசினேன். அவர் என்னை எதற்காகக் கூப்பிட்டார் என்றால்… ‘நான் பகவந்த் கேசரி திரைப்படத்தைப் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள்!
குறிப்பாகச் சில காட்சிகளும் தருணங்களும் இன்னும் என்னை விட்டு விலகாமல் மனதிலேயே நிற்கின்றன. அதற்காக உங்களைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன்’ என்றார். அதைக் கேட்டதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி!
அங்கிருந்து கிளம்பிய உடனே மகேஷ் பாபு சாருக்குத் தொடர்புகொண்டு, ‘சார், இப்போதுதான் விஜய் சாரைச் சந்தித்தேன். என் படத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவே பாராட்டிப் பேசினார்’ என்று அந்த மகிழ்ச்சியை அவரிடமும் பகிர்ந்துகொண்டேன்” என்றார்.