பேராசை: எல்லா உணர்வுகளை விடவும், பங்குச்சந்தையில் இருக்கவே கூடாத உணர்வு இது தான்.
பங்குச்சந்தையில் நாம் வைத்திருக்கும் பங்கு ஏற்றம் கண்டிருக்கும். இன்னும் ஏறும்… இன்னும் ஏறும் என்று வைத்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அந்தப் பங்கு விறுவிறு என இறங்கிவிடும்.
அப்போது எந்த லாபமும் இல்லாமலோ, பெரியளவு லாபம் இல்லாமலோ பங்கை விற்க வேண்டியதாக இருக்கும்.
ஒரு பங்கில் முதலீடு செய்கிறீர்கள் என்றாலே, இவ்வளவு லாபம் வந்தால், அந்தப் பங்கை விற்றுவிடுவேன் என்கிற இலக்கை செட் செய்துவிடுங்கள்.

அது வந்ததும், எந்த யோசனையும் இல்லாமல் விற்றுவிடுங்கள். அதை விடுத்து, இன்னும் ஏறும்… இன்னும் கொஞ்ச நாள் வைத்துகொள்கிறேன் என்று நினைத்தால், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்… அது சந்தையில் எந்தவிதமான பாதிப்பை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
கூடவே, ‘பேராசை பெருநஷ்டம்’ என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இத்தனையும் தாண்டி, இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தப் பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்று தோன்றினால், 80 சதவிகித பங்கை விற்றுவிட்டு, வெறும் 20 சதவிகித பங்கில் மட்டும் ரிஸ்க் எடுங்கள்.