தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக்கிக் கொண்டுவந்து அதிக விலைக்கு தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளில் பல சோதனைச் சாவடிகள் இருந்தும் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மைசூரில் இருந்து கோவைக்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக பர்கூர் அருகில் உள்ள சோதனைச் சாவடி காவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவைக்கு பூண்டு லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.