முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி காட்டி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் கரூருக்கு செல்கிறார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருக்கும் பத்திரிகையாளர்கள் அடாவடியாக நடத்தியிருக்கின்றனர்.