பெருந்தொற்று காலம் முழுவதும், ஃபௌசி ஒரு தந்திரமான சுய-சேவை சுழற்சி அறிக்கையிடல் முறையை உருவாக்கியதாக கபார்ட்டின் அறிக்கை விவரிக்கிறது. அதாவது, தனது நிறுவனமான NIAID-ஆல் நிதியளிக்கப்பட்ட விஞ்ஞானிகளையே புலனாய்வு அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கும்படி அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த உள்ளீடுகள்தான் அதிகாரப்பூர்வ புலனாய்வு மதிப்பீடுகளை வடிவமைத்தன.
பின்னர், ஆய்வகக் கசிவு கோட்பாட்டை மறுப்பதற்காக, இந்த மதிப்பீடுகளே ‘விஞ்ஞான ஒருமித்த கருத்து’ என்று பொதுவில் மேற்கோள் காட்டப்பட்டன. இந்த தந்திரமான செயல்பாடு, உண்மையை திட்டமிட்டு புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஃபௌசியின் முடிவுகளை எதிர்த்த அல்லது கேள்வி கேட்ட புலனாய்வு ஆய்வாளர்கள், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளானதாகவும், ஓரங்கட்டப்பட்டதாகவும், அவர்களின் தொழில் வாழ்க்கையில் பின்னடைவுகளைச் சந்தித்ததாகவும் சாட்சியங்கள் வெளிப்படுத்துகின்றன. “இது மாற்றுக் கருத்துக்களை நசுக்கியதுடன், நம்பகமான ஆதாரங்கள் புதைக்கப்பட்டு, உண்மைக்கு பதிலாக இணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்தது,” என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்து, உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணவைத்த ஒரு பெருந்தொற்றின் மூலப்புள்ளி குறித்த இந்த புதிய தகவல்கள், ஏற்கெனவே நிலவிவரும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன. துளசி கபார்ட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டாக்டர் ஃபௌசி தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும், அமெரிக்க அரசியலில் இது ஒரு பெரும் விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.!