Sports
oi-Yogeshwaran Moorthi
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது. வழக்கமாக மெஸ்ஸிக்கு எதிரணிகள் முக்கியத்துவம் கொடுத்து அவருக்காகவே ஒரு ஸ்பெஷன்ல் திட்டத்தை அரங்கேற்றுவர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியிடம் பந்து இருந்த போதும், அவரை எளிதாக ஸ்பெயின் அணி மடக்கி பந்தை கைப்பற்றியது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் மூலமாக ஸ்பெயின் அணி 38 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடையாத அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலமாக 37 போட்டிகளில் தோல்வி அடையாத அணி என்ற இத்தாலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்பெயின் அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதேபோல் அர்ஜென்டினா அணிக்கு ஒரு மோசமான நாளாக களத்தில் அமைந்தது. ஏனென்றால் ஸ்பெயின் அணி ஆட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே தெரியாமல், அர்ஜென்டினா அணி வீரர்கள் களத்தில் நின்று கொண்டிருந்தனர். இது டிவியில் பார்த்த ரசிகர்களுக்கும் கூட நன்றாகவே தெரிந்தது.
குறிப்பாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு அவமரியாதையான போட்டியாகவே அமைந்தது. வழக்கமாக மெஸ்ஸி களத்தில் நின்றால், அவருக்கு என்று ஒரு ஸ்பெஷல் திட்டம் எதிரணியால் அரங்கேற்றப்படும். அவரை சுற்றி 2 வீரர்களாவது இருப்பார்கள். ஆனால் நேற்றைய ஆட்டத்தின் ஸ்பெயின் அணி தங்களின் டிஃபென்ஸை நம்பியது.
அதனை மீறி மெஸ்ஸி வசம் பந்து சென்றாலும், உடனடியாக அவரிடம் இருந்து ஸ்பெயின் வீரர்கள் கைப்பற்றினர். டிரிபிள் செய்ய முடியாமல் மெஸ்ஸி தடுமாறி கொண்டே இருந்தார். இன்னும் சொல்லப் போனால், மெஸ்ஸியின் சில பாஸ்களையும் ஸ்பெயின் அணி தடுத்து நிறுத்தியது. வழக்கமாக எதிரணியின் வீக்னஸை அறிய மெஸ்ஸி நடந்து சென்று கவனித்து கொண்டே இருப்பார்.
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி ஓடுவதற்கான தேவை கூட எழவில்லை. பாதி நேரம் அர்ஜென்டினா கோல் போஸ்ட் பக்கமே மெஸ்ஸி சுமா நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கடைசி நேரத்தில் ஸ்பெயின் அணி ஒரு கோல் போட்ட பின்னரே, மெஸ்ஸி ஓரளவிற்கு அட்டாக்கிங் கேமை ஆட முடிந்தது. இதனால் மெஸ்ஸி ரசிகர்களுக்கு நேற்றிரவு மறக்க வேண்டிய நாளாக அமைந்தது.