`மகாநதி” தொடரின் மூலம் பிரபலமானவர் லட்சுமிபிரியா. ‘காவேரி’ என்கிற இவருடைய கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
தற்போது அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாகப் பதிவிட்டு வந்தனர். தற்போது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் லட்சுமி பிரியா.
காவேரியாகப் பரிச்சயமானவர் லட்சுமி பிரியாவாக எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
̀̀̀̀ ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10′ தற்போது ஆரம்பமாகியுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலர் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக லட்சுமி பிரியாவிடம் பேசினோம்.

அவர் பேசியதிலிருந்து, “முதன்முதலாக பிக்பாஸ்ல இருந்து அழைப்பு வந்தப்ப நாம என்னை வளர்ந்துட்டோமா நம்மளலாம் பிக்பாஸ் வீட்டுக்குக் கூப்டுறாங்கன்னுதான் தோணுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எனக்கு இதுக்கு முன்னாடி இருந்த சீசனுக்கே வரணும்னு இருந்துச்சு. ஆனா அப்ப என்னோட சீரியல் போனதால என்னால வர முடியல. இப்ப சீரியல் முடிச்சிட்டு எப்ப கூப்டுவாங்கன்னு ரொம்ப வெயிட் பண்ணிட்டிருந்தேன். நான் நிறைய விஷயங்கள் எதிர்கொண்டிருக்கேன். எனக்கு இந்த பிளாட்ஃபார்ம் வேணும்.