அந்தப் பதிவில் அவர், “தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நமது கல்வி முறையை மீண்டும் சீரமைப்பதற்கான மிகப்பெரிய படியாகும். நாடு முழுவதும் உள்ள மாணவத் தோழர்களுக்கு வாழ்த்துகள், உங்கள் அனைவரையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
தெருவில் இறங்கி ஜனநாயகம் மற்றும் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உறுதியுடன் களத்தில் நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்னும் 2 கோரிக்கைகள் மீதம் உள்ளன. மாணவர்கள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மதித்துப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”