பிரியாணி… நள்ளிரவில் தர்பூசணி; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு – மும்பையில் அதிர்ச்சி!

Spread the love

மும்பை பைதோனி பகுதியில் வசிக்கும் அப்துல்லா தொகாடியா (40) என்பவரும் அவரின் உறவினர்களும் ஒரே வீட்டில் கூடி விருந்து சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். அதிகாலை 1 மணிக்கு அவர்களில் அப்துல்லா உட்பட 4 பேர் தர்ப்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் உள்ளூர் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஆனாலும் அவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜெ.ஜெ., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் முதலில் ஒரு பெண் சிகிச்சை பலனலிக்காமல் இறந்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மற்றவர்கள் முறையே நஸ்ரின் டொகாடியா (35) மற்றும் அவர்களது மகள்களான ஆயிஷா (16), ஜைனப் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்தக் குடும்பத்தினர் பிரியாணி சாப்பிட்டதாகவும், பின்னர் இரவில் தர்பூசணி சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியும், தர்ப்பூசணியும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *