புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! – அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

Spread the love

அதையடுத்து விழுப்புரம் மாவட்டம், பூத்துறை பகுதியில் அவர் நடத்தி வந்த குடோனில் தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்த அந்த குடோனில் போலியாக தயாரிக்கப்பட்ட 625 வகையான மருந்துகள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள். அதையடுத்து அங்கு தொடர்ச்சியாக மூன்று நாள்கள் ஆய்வு செய்த அதிகாரிகள், அனைத்து வகையான போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப் பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ததுடன், குடோனுக்கு சீல் வைத்தனர். கடந்த 2025-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலைகள் வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது.

காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன்

காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன்

தற்போது இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவருக்கு முன்பு, சுகாதாரத்துறை செயலராக இருந்த முகமது யாசின் மிசோராமுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பித்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *