பெ.சண்முகம்: “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் போர் யானை.!”- முரசொலிக்கு ராஜ்மோகன் கண்டனம் | rajmohan condemns murasoli for criticizing p. shanmugam

Spread the love

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பெ.சண்முகம் - CPIM மாநில செயலாளர்

பெ.சண்முகம் – CPIM மாநில செயலாளர்

இது அநாகரிக்கத்தின் உச்சம். ஏழை,எளிய மக்களுக்காக அர்ப்பணித்த பெ.சண்முகம் காவிரி கரையோரம் பிறந்து அந்தச் சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது.

அப்படிப்பட்ட மாமனிதரை முரசொலியில் என்ன என்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள். டானிக் குடித்து வளர்ந்தவர்… அவர்களைப் போல (திமுகவினர்) டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா? இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *