திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியராக ஜெரால்டு (வயது: 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார். கடந்தாண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், இருவரும் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, கடந்த வாரம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஜெரால்டு, அந்த பேராசிரியையின் கணவர் மற்றும் சில மாணவர்களின் செல்போன்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியை, திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜெரால்டு மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் இருந்த ஜெரால்டை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.