போராட்டத்திற்குப் பின் அதிரடி: தேர்வு முறையைச் சீரமைக்க சிறப்பு குழு – மத்திய அரசின் திட்டம் என்ன? | pm Modi has constituted a task force led by Nandan Nilekani

Spread the love

நீட் வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி என இந்தியாவின் கல்வித்துறை அமைச்சகம் மீது மாணவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாகவே டெல்லியில் மாணவர்களின் போராட்டம் வெடித்து, அதன் விளைவாக அமைச்சர் தர்மேந்திர பிரதான், பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அதைத் தொடர்ந்து, தேர்வு முறை முழுமையாகச் சீரமைக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

இதன் பகுதியாக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் ஆறு துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த சிறப்புப் குழுவில் விண்வெளி விஞ்ஞானி, உளவுத்துறை அதிகாரி, ஐ.ஐ.டி இயக்குநர், சிவில் சர்வீஸ் அதிகாரி மற்றும் தளவாடப் பிரிவு நிபுணர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முறைகேடுகள் நடக்காதவாறு மிகவும் நம்பிக்கையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதே இந்தக் குழுவின் முதன்மை இலக்காகும். அத்துடன், வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *