இந்நிலையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயீம் ஹசன், “ஆரம்பத்தில் நான் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எனது பைகளைச் சோதிக்குமாறு கூறினேன்.
ஆனால், அவர்கள் திடீரென எனது கழுத்தைப் பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.

நான் யார் என்று பலமுறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டனர். போலீசார் என்னை லத்திகளால் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், அங்கிருந்த பொறுப்பு அதிகாரி என்னிடம் பேசும்போது கண்களைக் கீழே வைத்தவாறு பேசுமாறு மிரட்டினார்.
அவர்கள் உண்மையான போலீசாராக இருந்திருந்தால், ஏன் என்னை போலீஸ் வாகனத்தில் ஏற்றாமல் சாதாரண ஆட்டோவில் ஏற்ற முயன்றார்கள்? இந்த முழு சம்பவம் குறித்தும் முறையான விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும்” கூறியிருக்கிறார்.