அதற்காகவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்தி, அதன் முடிவு வருவதற்குள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக தாக்கல் செய்யப்படுகிறது. நீங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். கொள்கையளவில் பெண்கள் இட ஒதுக்கீட்டை முழுமனதுடன் ஆதரிக்கிறோம். அதே நேரம், தொகுதி மறு வரையறை மூலம் அதைச் செயல்படுத்துவதை எதிர்க்கிறோம்” என்றார்.
அகிலேஷ் யாதவ்-ன் உரைக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் நடத்தப்படும். தற்போது, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புடன் சேர்த்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடைபெறும் என்று நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், “தொகுதி மறுவரையறையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செயல்முறையிலிருந்து பிரிப்பதன் மூலம், இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது. எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம் பெண்களுக்கான விதிகள் அதில் சேர்க்கப்படுவதே அனைவருக்குமான உரிமையாக இருக்கும். எனவே, தற்போது முன்மொழியப்பட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 2023-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.