தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “தவெக தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாள்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுபான கடைகள் மூடுவது, பெண்களுக்கான பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஆக்கப்பூர்வமாகச் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அது 100% நிறைவேற்றப்படும்.