திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் பொதுமக்களுக்குப் பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்டிப்பாக அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளின் பட்டியலை மீண்டும் மறுஆய்வு செய்து, புதிய லிஸ்ட் எடுக்கும் பணிகளை துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.