“மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் இந்த ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்”- ஆர்.எஸ். பாரதி | DMK wins in Maduranthakam, the TVK government will collapse in January said R.S. Bharathi

Spread the love

மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “சட்டசபைக்கு பரந்தாமன் போல ஒரு ஆள் தேவை. இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகச் சென்றால் அடுத்த ஐனவரி மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும்.

நான் யாரையும் இழிவுப்படுத்தியும், தவறாகவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் தலையெழுத்து என் முன்னால் இங்கு அமர்ந்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சி தோழர்கள் மற்றும் திமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது.

ஆர்.எஸ் பாரதி

ஆர்.எஸ் பாரதி

கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை தவெக இழிவுப்படுத்திப் பேசியதை அடுத்த 21 நாட்கள் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

திமுகவின் வரலாறை, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் 21 நாட்கள் மனதில் வைத்து வைராக்கியமாக வேலை செய்தால் பரந்தாமன் வெற்றி பெறுவது உறுதி.

மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில்தான் தொடங்கியது. இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் மிசாவைப் பற்றி தெரியாது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், என்னைப் போன்றவர்கள்தான் மிசாவின் கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *