நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு ஷகீலாவே தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ஒரே இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் மொபைலில் கேம் விளையாடுவேன்.
டீ குடிக்க வேண்டும் என்றால் மட்டுமே எழுந்திருப்பேன். டீ குடித்துவிட்டு மீண்டும் வந்து அதே கேம் விளையாடுவேன். கேம் மட்டுமல்ல யூடியூப், இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்.
இப்படி மொபைல் போனை அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக என் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இப்போது அது அறுவை சிகிச்சை வரை வந்துவிட்டது. இது எனக்கு தேவையில்லாத செலவு.