இப்போது இவர்கள் இருவரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால், அதிமுக வென்ற தொகுதிகள் அந்தக் கட்சியிடமிருந்து நழுவிச் சென்று இப்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்கின்றன.
வருகிற இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும்தான் தவெக சார்பாகப் போட்டியிடுகின்றனர். இதனால், இது நிச்சயம் அதிமுகவிற்கான கௌரவப் பிரச்னையாகவும் அமையும் என்று கருதப்படுகிறது.