இதன் காரணமாக எனது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, நான் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வுகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், எனக்கு தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளர்.

தவெக எம்எல்ஏ-க்களுடனான குதிரை பேர விவகாரத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில் அரசியல் காழ்புணர்ச்சியால் தன்னை பழி வாங்கும் நோக்கில் சூழ்ச்சி நடைபெறுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.