மது குறித்த விழிப்புணர்வுகளில் அரசு ஈடுப்பட்டு வருகிறது. மதுவை தடுக்க வேண்டும், மது குடிப்பவர்களை தடுத்து அதில் இருந்து காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு மீன கிராமத்தில் மதுவை தவிர்க்க வித்யாசமான அவசியமான முன்னெடுப்பை எடுத்துள்ளனர்.
மது குடிக்க குறிப்பாக இளைஞர்கள் குடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது பல மட்டத்திலும் கவனம் பெற்று நாமும் இதை பின்பற்றலாமே என்று பேசு பொருளை உருவாக்கியிருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ளது விழுந்தமாவடி மீனவ கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஊர் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து மதுவை ஒழிப்போம், மக்களை காப்போம் என ஊரில் மது குடிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
ஊரில் மக்கள் கூடுகின்ற பொதுவான இடத்தில் ஃப்ளக்ஸ் வைத்துள்ளனர். அதில் பொது அமைதி, பொது சுகாதாரம், இளைஞர்களின் நலன் அகியவற்றை கவனத்தில் கொண்டு மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.