குத்தாலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேசுகையில், “பணிக்கு சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இது பற்றி உதவி செயற்பொறியாளரிடம் பேசுங்கள்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
நம்மிடையே பேசிய உதவி செயற்பொறியாளர், “கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்த இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தினை தருவதாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று போட்டுப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.
மாற்றைத்தை நோக்கிய புதிய அரசு, விரைந்து துறைச் சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரிக்கான நிலையான கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும் என்பதே அக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.