பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள `ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே.31) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியபோது, “என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு எனது குடும்பம் ஆதரவு தரவில்லை என்றாலும், தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள்.
மேலும் அவர்கள் யாருமே எதாவது நடிகரைப் பார்க்க வேண்டும் என்று இதுவரை கேட்டதே இல்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. ‘Cyprus’ விழாவில் ராம் படத்துக்காக நான் விருது வாங்கினேன்.

வழக்கமாக இப்படி விருது வாங்கும் போது பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறேன் எனச் சொல்லி அவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் அந்தச் சூழல் எனக்கு அமையவில்லை.
அடுத்து ‘பருத்திவீரன்’ படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினேன். அப்போது அதை பெற என் அம்மாவை அழைத்து போக வேண்டும் என இருந்தேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய காலகட்ட அரசியலால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அதனால் என் அம்மாவை விருது வாங்க வைக்கும் ஆசை நிறைவேறாமல் போனது.