அப்படியான உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்குது. இந்த சீரியல் தொடங்கி 2 வருஷத்துக்கு மேல ஆகுது. மக்களுக்கு எங்களுடைய கதாபாத்திரமும் நல்லாவே பரிச்சயம் ஆகியிருக்கு. நான் ரொம்பவே இன்ட்ரோவெர்ட் பையன். அதுனால, எனக்குப் பெரியளவுல ஃபிரண்ட்ஸ் இருக்கமாட்டாங்க.
ஆனா, இந்த சீரியல் மூலமாக கேப்ரில்லா, சந்தோஷ்னு இரண்டு நண்பர்கள் எனக்குக் கிடைச்சிருக்காங்க.” என்றவர், “இப்போ நான் எத்தனை சீரியல் பண்ணினாலும், பலரும் இப்போ என்கிட்ட ‘நந்தினி’ சீரியல் பத்திதான் பேசுவாங்க. இப்போவும் அந்த சீரியலுக்கான ஃபேன்ஸ் இருக்காங்க.

இப்போ அந்த சீரியலை ரீடெலிகாஸ்ட் செய்திட்டிருக்காங்க. அதனால, அந்த வைப்ரேஷன் இருந்துட்டே இருக்கு. அந்த சீரியலுக்குப் பிறகு அடுத்தடுத்து சன் டிவியில சீரியல் நடிச்சிட்டு இருக்கேன். என்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்குக்கூடப் போறது இல்ல.
முதல் பேன் இந்தியன் சீரியல் அது. இப்படிச் சொல்லிகிட்டே போகிற அளவுக்கு அந்த சீரியல்ல நிறைய மெமரிஸ் இருக்கு. அதுமட்டுமல்ல, விஜயகுமார் சார் மாதிரியான சீனியர் நடிகர்களோட சேர்ந்து நடிச்சது நல்ல அனுபவமாக இருந்துச்சு.
ஆனா, அவர் ரொம்பவே எளிமையான நபர். சொல்லப்போனால், அந்த சீரியல் டைம்ல நான்தான் விஜயகுமார் சாருடைய ஒரிஜினல் பையன் அருண் விஜய்னு நினைச்சுட்டாங்க.” என்றார்.