இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2026 – 27ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் வினாதாள் கசிவு காரணமாக நீட் மறுதேர்வு ஜூன்.21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப பதிவில், “இரண்டு அடுக்கு CRPF+CISF பாதுகாப்புடன் IAF விமானப் போக்குவரத்து.
AI கண்காணிப்புடன் கூடிய 4 அடுக்கு CCTV,
உள்ளே நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம், பல கட்ட சோதனைகள்,
பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பல நிலை மேற்பார்வை.
இவை ஏதோ உயர் மட்ட, ரகசிய ராணுவ மென்பொருளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல. 2026 ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்காக கல்வி அமைச்சகம் செய்துள்ள ஏற்பாடுகள் தான்.