மாமனாருக்கு பிடிக்காத மருமகளின் இரவு விருந்துகள்! CCTVயில் பிசினஸ்மேனை கண்டு திகைத்த கான்பூர் போலீஸ் | Kanpur Businessman Murder.. Father-in-Law Disliked Daughter-in-Law’s Late-Night Parties.. Police Shocked by CCTV Twist

Spread the love

India

oi-Hema Vandhana

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 63 வயது தொழிலதிபர் வினீத் மினோச்சா தனது வீட்டின் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலில் ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 26 கத்திக்குத்துகள் இருந்தன. அதிகாலை 3 மணியளவில் விருந்திலிருந்து வீடு திரும்பிய அவரது மருமகள் ஷாலுவும், கணவர் சுப்ரத்தும் இந்தக் கொடூர காட்சியைப் பார்த்து பேயறைந்தது போல ஆகிவிட்டனர்.. போலீசுக்கும் ஓடினார்கள்.. கடைசியில்தான் அந்த ட்விஸ்ட் வெளியானது.

தொழிலதிபர் வினீத் மினோச்சாவின் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை கொண்டும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், முன்னாள் வேலைக்காரர் விஷாலும், அவரது கூட்டாளி ராஜ் கிஷோரும் வந்து சென்றது பதிவாகி இருந்தது. அவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள்? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது

Kanpur Businessman Murder

தொழிலதிபர் மருமகளுக்கு அட்வைஸ்

அவர்கள் 2 பேரைம் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.. உடனே அவர்கள் மருமகள் ஷாலு சொல்லிதான் இந்த கொலையை செய்ததாகவும், அப்படி செய்ததால், பணம் தருவதாக சொலு சொன்னதாகவும் போலீசாரிடம் போட்டுடைத்தனர்.. இதையடுத்து ஷாலு கைது செய்யப்பட்டார்.

ஷாலுவிடம் போலீஸார் விசாரித்தபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சாதித்தாராம்.. ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மொத்த உண்மையையும் சொல்லி விட்டார்

அதாவது, ஷாலுவின் நடவடிக்கைகள் அவரது மாமனாருக்கு பிடிக்கவில்லையாம்.. அதனால் சிசிடிவி கேமராக்களை வீட்டிற்குள்யே பொருத்தி வைத்து, மருமகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்துள்ளார்.. ஷாலுவுக்கு எப்போதுமே இரவு விருந்துகளில் கலந்து கொள்வதில் பிரியம் உள்ளவராம்.. இதனால் தாமதமாக வீட்டுக்கு வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். இது மாமனாருக்கு பிடிக்கவில்லை..

கடுப்பான மருமகள்

பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், வீட்டுச் செலவுகளில் சிக்கனம் வேண்டும், பணத்தை தண்ணீராய் இறைக்க கூடாது என்றெல்லாம் மாமனார் அட்வைஸ் செய்தாராம்.. அதுமட்டுமல்லாமல் தானும், தன்னுடைய கணவரும் சின்ன சின்ன செலவுகளுக்கும் மாமனாரிடம் பணம் கேட்க வேண்டியிருந்தது ஷாலுக்கு பிடிக்கவில்லை..

கடந்த ஜூலை 28ம் தேதியும், ஷாலு ஒரு விருந்தில் இருந்து தாமதமாக வீடு திரும்பினார். இதனால் ஷாலுவை, மாமனார் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.. இந்த தகராறுக்கு பிறகுதான், மாமனாரை கொலை செய்ய ஷாலு முடிவு செய்திருக்கிறார்.. இதற்காக ஷாலு, விஷாலை அணுகி தனது மாமனாரை கொலை செய்ய ரூ.6 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ரூ.2 லட்சத்தை கடந்த 6-ம் தேதி அட்வான்ஸ் கொடுத்துள்ளார். மீச்சமுள்ள ரூ.4 லட்சத்தை 15 நாள்களுக்கு பிறகு தருவதாக தெரிவித்துள்ளார்.

டூப்ளிக்கேட் சாவி ரெடி

மாமனார் கொலைக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே ஷாலு தனது வீட்டின் அசல் சாவியை விஷாலிடம் தந்தார்.. அந்த சாவியை வைத்து டூப்ளிகேட் சாவி தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி, ஜென்மாஷ்டமி பண்டிகையின்போது, மாமனாரை கொலை செய்வது என முடிவு செய்தார்.. திட்டமிட்டபடியே, அன்றைய தினம் தன்னுடைய கணவர் சுப்ரத் மற்றும் குழந்தையுடன் இரவு விருந்துக்கு ஷாலு கிளம்பி சென்றுவிட்டார்.

இவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே விஷாலும், ராஜ் கிஷோரும் தங்களிடம் இருந்த டூப்ளிகேட் சாவி மூலம் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.. ஆனால், அங்கிருந்த செக்யூரிட்டி மதன் அவர்களை தடுத்து நிறுத்தவம், உடனே ஷாலுவுக்கு போனை போட்டு, வாட்ச்மேனிடம் பேச செய்துள்ளார்கள்.

வாட்ன்மேனிடம் பேசிய ஷாலு

ஷாலு வாட்ச்மேனிடம், “விஷாலும் கிஷோரும் மருந்துகளை டெலிவரி செய்ய வந்திருக்கிறார்கள்.. அவர்களை உள்ளே அனுப்பி வை” என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பிறகு உள்ளே விஷாலும் கிஷோரும் நுழைந்து, மினோச்சாவை கத்தியால் தாக்கி 26 முறை குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள்.. நள்ளிரவு பார்ட்டி முடிந்து ஷாலுவும் அவரது கணவரும் அதிகாலை 3.00 மணிக்கு , வந்தபோது, மினோச்சா படுக்கையறைக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அலறி கதறுவது போல நடித்தாராம் ஷாலு..

இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, இப்போது கொலை செய்த விஷால், கிஷோருடன் ஷாலுவும் கைதாகி ஜெயிலில் உள்ளார்..!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *