தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது.
இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, “விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவதை உறுதி செய்ய, இந்தக் கட்சிகள் (விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்) அனைத்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அதிமுக-வுக்குத் தேவையான ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை என்பது மிகத் தெளிவானது.
எம்.எல்.ஏ-க்களை ஒன்றும் வேறு எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது.
எங்களது கணிப்பின்படி, சட்டமன்றம் கூடும்போது தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது”