மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன்: அமைச்சர் நிர்மல்குமார் பகீர் தகவல் – Kumudam

Spread the love

மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 16-ந் தேதி, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட இந்த வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்று கூறப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடனான ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியை வைத்து கணக்கிடும்போது, மின் துறையின் கடன் அளவு 77.6 சதவீதம் ஆகும்.இந்த நிலையில், மின் துறைக்கு என தனியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருந்தார். அதன்படி, இன்று மின் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து, வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 25 ஆண்டுகளாக மின்வாரியம் கடந்து வந்த பாதை குறித்து விரிவான விளக்கம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:-மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.2021 – 2026 வரை மின்வாரிய செலவு – ரூ.5.32 லட்சம் கோடி.2021 – 2026 வரை மின்வாரிய வருமானம் – ரூ.4.97 லட்சம் கோடி.2021 – 2026 வரை மின்வாரிய பற்றாக்குறை – ரூ.34,447 கோடி.கட்டணம் உயர்த்தப்படும் போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறது தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை. புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை.

மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.25 ஆண்டுகள் மின்துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை. 2001 முதல் 2006 வரை மின்துறையில் ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை மின்துறையில் ரூ.35,463 கோடி நஷ்டம்.

மின்துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 கோடி நஷ்டம், 2016 முதல் 2021 வரை ரூ.58,534 கோடி நஷ்டம்.மின்துறையில் 2021ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை ரூ.34,447 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது.மின்சார வாரியத்தில் புதிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் ரூ.51,000 கோடி செலவுகள் அதிகமாகியுள்ளது.மின்சாரத்துறையில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர். மின்சாரத்துறையில் புதிதாக எதுவும் செய்யாமல் செலவுகள் மட்டும் எப்படி அதிகமாகி உள்ளது.

காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியாளர்கள் இடம் மாற்றமும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. நடப்பாண்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட மாட்டது.இவ்வாறு அவர் கூறினார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *