மீனாட்சியம்மன் கோயில் கோயில் நில விவகாரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

Spread the love

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு, இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையி்ல் நீதிமன்றத் தடையை மறைத்து 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன்

இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஒ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *