முதல்வர் உரை: “கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சத்தை புரிந்துகொள்ள முடிகிறது”- தங்கம் தென்னரசு| thangam thennarasu criticizes vijay tn assembly speech

Spread the love

முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரையை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன.

மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை. ஆனால், குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.

 முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

சட்டம்–ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால், கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *