`முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய கட்சி; அன்புச் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்’ – ஜெகன் மோகன் ரெட்டி

Spread the love

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் தன் எக்ஸ் பதிவில், “எனது அன்புச் சகோதரர் விஜய்க்கு சிறப்பான மற்றும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்! சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதனை. மக்கள் பணிக்கான இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உங்களுக்குப் பேராற்றலும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். இறைவன் எப்போதும் உங்களோடு இருக்கட்டும்.

ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி - விஜய்

ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி – விஜய்

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்கு எனது அனுதாபங்கள் திதி (மம்தா பானர்ஜி) உடன் இருக்கிறது.” எனக் குறிப்பிட்ட அவர் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதை ஒரு அண்டை மாநிலத் தலைவர் அங்கீகரித்துப் பாராட்டுவது, விஜய்யின் அரசியல் வருகை தென்னிந்திய அரசியலில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலையைக் காட்டுகிறது. குறிப்பாக, ஜெகன் மோகன் ரெட்டிக்கும் விஜய்க்கும் இடையே உள்ள நட்பு ரீதியான உறவை இந்த “சகோதரர்’ என்ற விளிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *