ஒரு ரெண்டு லெஜண்ட்ஸ் வந்து இதைச் சொல்லும்போது, எனக்கும் நம்பிக்கை கிடைச்சது. அப்புறமா மிஷ்கின் சாருக்குக் கதை சொன்னேன். அவர், ‘ஏய், நல்லா இருக்குடா. அதை பண்ணலாம்டா. கமர்ஷியலா சூப்பரா இருக்குடா. நான் பண்றேன்’னு சொல்லிட்டாரு.
ஏன்னா, மிஷ்கின் சார் எல்லாத்தையுமே நொட்டை சொல்கிற கேரக்டர். அவர் இதை ஓகே சொல்லும்போது எனக்கும் நம்பிக்கை வந்தது. ஊர்வசி அம்மாவை நாங்க ‘அம்மா அம்மா’ன்னுதான் கூப்பிடுவோம்.
உண்மையிலேயே நீங்க எங்களை கஷ்டப்படுத்தல, நாங்கதான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்கோம். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துக்குப் பாலக்காட்டுல சூட்டிங் செய்திட்டு இருந்தோம்.

அங்கப் போன முதல் நாளே, ஊர்வசி அம்மாவுடைய அண்ணன் இறந்துவிட்டதாக போன் வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. படத்துக்காக பெரிய செட் அங்க போட்டுட்டோம். அப்போ ஊர்வசி அம்மா, ‘பாண்டி, நீ கவலைப்படாத, நீங்க கேன்சல் பண்ண வேண்டாம்.
நான் போயிட்டு மறுநாளே வந்துடுறேன்’னு சொல்லி மறுநாளே படப்பிடிப்புக்கு வந்தாங்க. அதுல பெரிய சவால் என்னன்னா, பயங்கர காமெடியான சீன்ல நடிக்கணும். அது ரொம்ப கஷ்டம். ஒரு சோகத்துல இருக்கிற இவங்களால எப்படி காமெடியா பண்ண முடியும்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, அந்த சீன்ல பிரிச்சிட்டாங்க!” என்றார்.