மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்குருவதோட்ட (Anguruwatota) நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில், புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு என்பதால் முதியவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தீ அசுர வேகத்தில் பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தின் போது இல்லத்தில் இருந்த 51 முதியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இல்லத்தில் முதியவர்களுடன் சேர்த்து, மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் உதவியோடு பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.