காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின், தீர்ப்பு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தச் சூழலில், அங்கு விரைவில் பூமி பூஜை நடத்தப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் உரிமைகளையும் விவசாயிகள் நலனையும் காக்கக் கோரி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் இன்னும் அமைதியாக (Silent Mode) இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எம்.பி.மாணிக்கம் தாக்கூர் சமூக வலைத்தளப் பதிவில், “Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்? இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights-காக strongஆ stand எடுத்திருக்கார்.
ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல?
PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.