லெபனானில் அவர் காட்டிய இந்த அசாத்திய அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை மே 2026-ல் அவரை “2025-ஆம் ஆண்டிற்கான ஐ.நா ராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு” தேர்வு செய்தது.
அமைதி காக்கும் பணிகளில் பாலினப் பார்வையை மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கும் வீரர்களுக்கு 2016 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே 29, 2026 அன்று, சர்வதேச ஐ.நா அமைதிப்படையினர் தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்தியப் பெண் அதிகாரி மேஜர் அபிலாஷா பராக் ஆவார். இதற்கு முன் இந்த பெருமையைப் பெற்றவர்கள்:
மேஜர் சுமேன் கவானி (2019 – தெற்கு சூடான் பணி)
மேஜர் ராதிகா சென் (2023 – காங்கோ குடியரசு பணி)

இந்திய அமைதிப்படை லெபனானில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, லெபனானில் 48 நாடுகளைச் சேர்ந்த 7,538 அமைதிப்படை வீரர்கள் உள்ளனர். இதில் இத்தாலி, இந்தோனேசியா மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, 642 வீரர்களுடன் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இத்தகைய சவாலான சூழலில் ஒரு இந்தியப் பெண் அதிகாரி முன்னின்று வழிநடத்தி உலக விருதை வென்றிருப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!
ராணுவத்தில் இணைய விரும்பும் இளம் பெண்களுக்கு மேஜர் அபிலாஷா பராக் கூறும் வார்த்தைகள் தூண்டுகோலாக இருக்கும், “உங்களுக்குத் தேவை அசாத்தியமான ஆர்வம் மட்டுமே. அர்ப்பணிப்புடன் வாய்ப்புகளைப் பிடித்துக் கொண்டு உழையுங்கள். இன்றைய தேதியில் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை!”