'யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?' – திமுக, பாஜகவை சாடிய பிரவீன் சக்கரவர்த்தி

Spread the love

தமிழக அரசியல் பரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கட்சிகளின் உரையாடல்களை வைத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்…

தவெக: “எங்களுடையது மதச்சார்பற்ற கொள்கை.”

தமிழக வாக்காளர்கள்: “எங்களுக்கு தவெக-வின் மதச்சார்பற்ற ஆட்சி தான் வேண்டும்.”

காங்கிரஸ் : “சரி. நாம் தவெக-விற்கு ஆதரவு அளித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.”

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்
தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்

பாஜக : “இல்லை. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்தே ஆக வேண்டும்.”

திமுக: “சரிங்க ஐயா. நாங்கள் உங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம்; மற்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெக-விற்கு உதவாமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.”

யார் யாரை ஏமாற்றுகிறார்கள் (துரோகம் செய்கிறார்கள்)?” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *