ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா: மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்குமா?| Ravneet Singh Bittu Resigns as Cabinet Reshuffle Buzz Grows

Spread the love

சரியாக, அந்த நேரத்தில் தான் மத்திய அமைச்சரவை மாற்றம் என்கிற பேச்சு எட்டிப்பார்த்தது.

இதற்கேற்றாற் போல, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து சந்தித்தனர்.

ஜூலை மாதம் நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் என்று வலுத்த சத்தங்கள் திடீரென அமைதியானது.

பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

பிரதமர் மோடி – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

முர்மு உடனான சந்திப்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையே இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்.

பின்னர், மோடிக்கு அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் இருந்தன.

ஆக, அதில் பிஸி ஆகிவிட்டார் இந்திய பிரதமர்‌ மோடி.

ஜப்பான் பிரதமர் இந்தியா வருவதற்கு முன் திரௌபதி முர்மு ஆந்திராவிற்கு பயணம் சென்றிருந்தார்.

இதனால், அமைச்சரவை மாற்றத்திற்கு தோதாக, குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஆனால், இதனால் மட்டும் தான், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி போடப்பட்டது என்று காரணத்தைச் சுருக்கிவிட முடியாது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பு, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால், புதிய அமைச்சர்களுக்கு கூட்டத்தொடருக்கு தயாராக குறைந்த நேரமே இருக்காது என்பதும் ஒரு காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *