ரஷ்ய எண்ணெய் வாங்கியது ஏன்? பின்லாந்தில் ஜெய்சங்கரின் அதிரடி பதில்|Jaishankar Hits Back at Criticism Over Russian Oil Purchases

Spread the love

நாம் அனைவரும் முதிர்ந்த மனிதர்கள். உலக அரசியலின் ஆட்டம் என்னவென்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால், இந்த விஷயத்தில் யாரும் எங்களுக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை.

இந்திய ஆயுதங்களைக் கொண்டு எந்தவொரு ஐரோப்பிய நாடும் இதுவரை தாக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பாவைப் பற்றி எங்களால் அப்படிப் பெருமையாகச் சொல்ல முடியாது.

ஐரோப்பா விற்கும் ஆயுதங்கள் தான் இந்தியாவைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது இன்றோ நேற்றோ நடப்பதல்ல. பல ஆண்டுகளாக நடக்கிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியர்களாகிய நாம் என்றுமே ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இது மிகவும் நியாயமான ஒரு வாதம் தானே?

விலை குறைவாகக் கிடைப்பதையும், தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டுதான் நாங்கள் எண்ணெய் வாங்குகிறோம்.

அந்தச் சமயத்தில் சந்தையில் கிடைத்த பெரும்பாலான எண்ணெய் ரஷ்யாவினுடையது தான்.

ஏனென்றால், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை ஒட்டுமொத்தமாக வாங்கிக் குவித்தன.

அதுதான் எங்களுடைய பாரம்பரிய எண்ணெய் விநியோகச் சந்தையாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், அப்போது ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைதான் எங்களை ரஷ்யா நோக்கித் தள்ளியது” என்று பதிலளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *