

இந்நிலையில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஆறுமுகம் வீட்டின் வேலி வழியாக அடையாளம் தெரியாத நபர் வந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார், சத்திரக்குடி பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளியை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் மதுரை அரிட்டாபட்டியில் வசித்து வந்த மோகன் என்பதும், ஆறுமுகத்தின் வீட்டருகே நடந்த பேருந்து நிழற்குடை கட்டுமான பணியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் மூதாட்டி ஆறுமுகத்திடம் ரூ 10 ஆயிரம் கடன் வாங்கியிருந்த மோகன், அதனை திருப்பி கொடுக்காமல் மேலும் கடன் கேட்டு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி ஆறுமுகம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், மூதாட்டி ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடையும் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகனை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.